சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக “பார்ட்டி ஃபண்ட் (Party Fund)” என்று அவர் குறிப்பிட்டதும் எதிர்க்கட்சியினர் மிகுந்த பதற்றமடைந்ததாகவும், ஒரே ஒரு வார்த்தையில் அனைவரையும் விஜய் ‘டிரிக்கர்’ செய்துவிட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் ஃபயர் எமோஜிக்களுடன் ட்வீட்களைக் குவித்து வருகின்றனர். “விஜய் பேச மாட்டார் என்று சொன்னவர்களுக்கு இதுவே வச்சு பொளந்த பதிலடி” எனத் தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள்.
தளபதி கொடுத்த ட்ரீட்மென்ட் எப்படி?.. முதல்வரின் ‘சிங்கிள் டேக்’ ஆக்ஷன்..!
அதே நேரத்தில், திமுக தரப்போ “ஆட்களே இல்லாத அவையில் யாருக்கு டீ ஆத்துகிறார்?” என விஜய்யை விமர்சித்து ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளது. மு.க. ஸ்டாலினுக்கு எதிராக “உங்க அப்பாவை எங்கப்பா காணோம்?” என்ற குட்டிக்கதையைச் சொல்லிவிட்டு, தனது வழக்கமான சினிமா பாணியில் ‘பினிஷ்’ (சைகை) காட்டிய விஜய்யின் வீடியோ தற்போது நாடு முழுவதும் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக, ‘போக்கிரி’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்தைப் போல, சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேப்பரைப் பார்க்காமல் தன்னிச்சையாகப் பேசி எதிர்க்கட்சியினரை “டோட்டல் வாஷ் அவுட்” செய்துவிட்டார் என த.வெ.க தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒரே ஒரு வார்த்தைல மொத்த பேரையும் ட்ரிக்கர் பண்ணி விட்டாப்ல ! 🤣🤣🤣 pic.twitter.com/gXSXGXzbBP
— Prashanth Rangaswamy (@itisprashanth) June 23, 2026
திரைப்பட விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி தற்போது ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “விஜய்யைப் பேசச் சொல்லி வம்பு இழுத்தவர்கள் எல்லாம், அவர் இப்போது பேசி முடித்ததும் ஓடுகிறார்களே!” என்று அவர் கிண்டலடித்துள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் திமுகவினரை பயங்கரமாக ‘டிரிக்கர்’ செய்து, விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

