கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப், தி கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’அமைப்போடு இணைக்கப்பட்ட கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் விலங்கின ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்த, தனது 5 மற்றும் 6-வது அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் கண்காட்சியை கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
இந்த பிரம்மாண்ட நிகழ்வுக்காக நாடு முழுவதிலும் உள்ள நாய் பிரியர்கள், நாய் வளர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் சிறப்பம்சங்களாக நடுவர் குழு,
நாய் இனங்களின் தனித்துவத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற அமைந்த இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 11 போட்டிப் பிரிவுகளின் கீழ் 50-க்கும் மேற்பட்ட நாய் வகைகளைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான நாய்கள் பங்கேற்றது அவற்றை கணக்கீட்டு அவைகளைக்கு மதிப்பெண்கள் வழங்கி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்.
எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!
நாய் இனத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில், இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய நடுவர்களான ஷரத் சர்மா, பிரீதம் மற்றும் ரஞ்சித், மற்றும் முன்ஜால் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட நடுவர் குழு இந்த நாய் வகைகளை மதிப்பீடு செய்தது.
இந்த நிகழ்வில் டெல்லி, கல்கத்தா, பூனா, மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சிறந்த நாய் வளர்ப்பாளர்கள் மற்றும் நாய்கள் கலந்து கொண்டன.
பிரம்மாண்ட கிரேட் டேன் நேர்த்தியான டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், மற்றும் மக்களின் மனதைக் கவர்ந்த கோல்டன் மற்றும் லேப்ரடார் ரெட்ரீவர்ஸ் போன்ற உலகளாவிய நாய் இனங்களுடன், சிறிய ரக நாய்களான டச்ஷண்ட் மற்றும் பக் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தது. மேலும், நமது மண்ணின் பெருமையான கொம்பை, கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் போன்ற நாட்டு நாய் இனங்களின் அணிவகுப்பு இந்த கண்காட்சியின் மிக முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் தலைவர் தனு ராய் மற்றும் செயலாளர் சரவணகுமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சி, செல்லப்பிராணி வளர்ப்பை ஊக்குவித்தல், நாய் இனங்களின் தூய்மையைக் கொண்டாடுதல் மற்றும் நாய் ஆர்வலர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை எட்டியது.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நாய் பிரியர்கள், மற்றும் செல்லப்பிராணிகளை வளர்க்க விரும்பும் ஏராளமான பொதுமக்கள் இந்த நாய் அழகுக் கண்காட்சியைத் திரளாக வந்து கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

