90களில் கதாநாயகனாக அறிமுகமாகி, பின்னர் ‘பருத்திவீரன்’ படத்தின் ‘சித்தப்பு’ கேரக்டர் மூலம் பிரபலமானவர் நடிகர் சரவணன். சமீபத்தில் ‘வித் லவ்’ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
தற்போது ‘போலீஸ் ஃபேமிலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி திடீரென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!
குடும்பப் பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகவே சுமூகமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களை ஆட்களை வைத்து சரவணன் அகற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனக்கோ அல்லது தன் உடைமைகளுக்கோ ஏதேனும் நேர்ந்தால் அதற்கு சரவணன் மட்டுமே பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
தன்னிடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமலேயே, சரவணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக சூர்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.

