இந்த தோசை செய்வதற்கு அரிசி தேவையில்லை; முழுக்க முழுக்க புரதச்சத்து (Protein) நிறைந்த பருப்புகளை மட்டுமே வைத்து செய்யப்படுவதால், இது சர்க்கரை நோயாளி மற்றும் எடையைக் குறைக்க நினைப்போருக்கு (Weight loss) ஏற்ற சிறந்த காலை/இரவு உணவாகும்.
பருப்பு தோசை செய்முறை
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு – 1 கப், மசூர் பருப்பு (Masoor Dal) – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 3, சீரகம் – 1 டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
Step 1: துவரம்பருப்பு மற்றும் மசூர் பருப்பை நன்றாகக் கழுவி, 2 முதல் 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பருப்புடன் காய்ந்த மிளகாய், சீரகம், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் தோசை மாவு பதத்திற்கு (கொஞ்சம் கொரகொரப்பாக) அரைத்துக் கொள்ளவும்.
ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!
Step 2: (இதற்கு புளிக்க வைக்கத் தேவையில்லை, உடனடியாகச் சுடலாம்). தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை மெலிதாகத் தேய்த்து, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக மொறுமொறுவென்று சுட்டெடுக்கவும்.
காரசாரமான வேர்க்கடலை சட்னி
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை – 1/2 கப், சின்ன வெங்காயம் – 5, பூண்டு – 3 பற்கள், காய்ந்த மிளகாய் – 3, புளி – சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை
Step 1: ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கி ஆற வைக்கவும். மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, வதக்கிய பொருட்கள், புளி மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைக்கவும்.
Step 2: கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டினால் சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.

