கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை கூட்டங்களோடு ஒன்று சேராமல் தனியாக நடமாடி வரும் கம்பீரத் தோற்றம் கொண்ட பாகுபலி யானை இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி போக்குவரத்து மிகுந்தசாலை மற்றும் குடியிருப்புகள் வழியாக கிராமங்களில் உள்ள விவசாய விளைபொருள்களை தின்று வருகிறது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் உதககை சாலையில் நேற்று இரவு பாகுபலி யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி உதகை சாலையில் உள்ள கடைக்குள் புகுந்து பொருட்களை தேவைப்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் காட்டு யானையை பாகுபலியை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!
யானைகளின் வலசைப் பாதையில் வியாபார நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் பொதுமக்களின் இடையூறு காரணமாக யானைகள் தங்களது வழக்கமான வலசை பாதையில் செல்வது தடைபட்டுள்ளதாகவும் ஆகவே இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

