தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் பல்வேறு நகர்வுகளும் பிரமிப்பிடுவதாக இருந்தாலும், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை தள்ளிப் போனாலும், அவரது குடும்பத்தில் இருந்து சமூக நலனுக்காக முன்னெடுப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில், ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் நீண்ட காலமாகவே பாரத் சேவா என்று அமைப்பின் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் மக்கள் மேடை என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திரையரங்கா? ஓடிடியா?.. ‘ஜனநாயகன்’ படக்குழுவின் ரகசிய ப்ளான்..!
இந்நிலையில், லதா ரஜினிகாந்த்தின் இந்த திடீர் அரசியல் மற்றும் சமூக பிரவேசத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுவரை உங்கள் ராகவேந்திரா மண்டபத்தில் எத்தனை ஏழை மக்கள் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்?
உங்க ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா?
இப்போது விஜய் ஜெயித்ததும். மக்கள் மீது உங்களுக்கு திடீர் பாசம் ஏன்?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உங்கள் ராகவேந்திரா மண்டபத்தில் எத்தனை ஏழை மக்கள் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்?
— Blue Sattai Maran (@tamiltalkies) June 5, 2026
உங்க ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா?
இப்போது விஜய் ஜெயித்ததும். மக்கள் மீது உங்களுக்கு திடீர் பாசம் ஏன்? pic.twitter.com/Nuy3MnNTxC

