ஜெயிலர் திரைப்படம் ரஜினியும், நெல்சனும் எதிர்பார்த்தபடியே மெகா ஹிட் படமானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. சொல்ல போனால் இரண்டு பேருக்குமே அந்த படம் புதிய அத்தியாயத்தை தொடங்க வைத்தது என்றே சொல்லலாம்.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி, அனிருத், நெல்சன் திலீப்குமார் ஆகியோருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சொகுசு கார்களும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகத்துக்கான லீடை படத்தில் கொடுத்திருந்தனர். இரண்டாவது பாகம் உருவாகிறது ஷாருக்கான் எல்லாம் இதில் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், கூலி படத்தில் அமீர்கான் நடித்து காலியானது போல் தானும் ஆகி விடக்கூடாது என்று ஷாருக்கான் சுதாகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய்யால் வடிவேலு காணாமல் போய்டுவாரு.. வெளிப்படையாக பேசிய எஸ்ஏ சந்திரசேகர்..!
அதை சமயம், வித்யா பாலன் சந்தானம் உள்ளிட்டோரும் இத்திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யா, சிவராஜ்குமார், மோகன்லால், உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டாலும், சில வேலைகளுக்காக ரீசூட் செய்ய இயக்குனர் பிளான் செய்திருப்பதாகவும், கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. இந்த நிலையில், அப்படி எல்லாம் ரீசூட் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக திரைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்களும் வெளியாகி உள்ளன.

