நடிகர் அஜித் தரப்பிலிருந்து போடப்படும் ஒரு கண்டிஷனை கேட்டு தயாரிப்பாளர்கள் அனைவரும் தலை தெறிக்க பேக் அடித்து ஓடுகிறார்களாம். அதாவது, அஜித்திற்கு பேசப்படும் பல கோடி ரூபாய் சம்பளத்தை இந்திய வங்கிக் கணக்கில் செலுத்தக்கூடாது என்றும் அந்த மொத்த தொகையும் அவரது துபாய் நாட்டு வங்கி கணக்கில் தான் நேரடியாக செலுத்த வேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம்.
இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை சர்வதேச முறை விதிமுறைகளின் படி வெளிநாட்டு அக்கவுண்டிற்கு மாற்றுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் வருவிவகாரங்களை நினைத்து தயாரிப்பாளர்கள் மொத்தமாக பின்வாங்கி விடுகிறார்களாம்.
கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!
திரையுலகில், பலத்த பேச்சுக்கள் அடிபடுகிறது. அஜித்தின் இந்த ஒற்றை கண்டிஷன் தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் பதற வைத்துள்ளது என்று சொல்லலாம். அஜித்தின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், அதற்கு பணம் போட போகும் அந்த துணிச்சலான தயாரிப்பாளர் யார்? படத்தை இயக்கப் போகும் அந்த இயக்குனர் யார்? என்ற பல மில்லியன் டாலர் கேள்விகள் விடை தெரியாமல் ரசிகர்கள் விழி பிதுங்கி குழப்ப நிலையில் இருக்கிறார்களாம்.

