கடலூர் அஞ்சலையம்மாளின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட வரலாற்றுப் பாடநூலில் சேர்க்க வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள்: வீர வரலாற்றை பாடமாக கற்பிக்க வேண்டும்! தென்னாட்டு ஜான்சிராணி மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை அஞ்சலை அம்மாள் அவர்களை புறக்கணித்து விட்டு எழுத முடியாது. அவரது போராட்டங்களைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள்.
அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை. கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார்.
அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். அவருடைய வீரமும், தியாகமும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். எனவே, தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் வரலாற்று பாடநூலில் கடலூர் அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள்: வீர வரலாற்றை பாடமாக கற்பிக்க வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 1, 2026
தென்னாட்டு ஜான்சிராணி மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில்… pic.twitter.com/dx4gnlMYHh

