தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் சாதாரணப் பாடல் அல்ல; அது தமிழர்களின் பெருமை மற்றும் அடையாளத்தின் வெளிப்பாடு. தமிழ் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை என்று வரும்போது, அரசியல் கட்சிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரே குரலாக, தமிழர்களாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கப்பட்டு அது கட்டாயமாக்கப்படுவதை அதிமுக முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ளார்.
நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!
மனோன்மணியம் சுந்தரனாரால் எழுதப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசாணையின் அடிப்படையில் பின்பற்றிடப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இது அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டது.
சமீபகாலமாக அரசு மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முன்னுரிமை அளிப்பதில் ஏற்பட்ட சில விவகாரங்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தையும் மொழி உரிமையையும் நிலைநாட்டும் வகையில் இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

