பொதுவாக அனைவருக்குமே நீண்ட நாள் நோயின்றி வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்காக, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிட்ட ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவது போன்ற பல்வேறு விஷயங்களை செய்து வருவோம். எப்போது, ஒருவர் உடலில் எந்தவித கோளாறும் ஏற்படாமல் உள்ளதோ அப்போது அந்த நபர் ஆரோக்கியமாக உள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!
ஆகவே, குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளை ஒருவர் தொடர்ந்து சந்தித்து வந்தால், அந்த நபரின் உடல் ஆரோக்கியம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், ஒருவர் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் தெரியக்கூடிய ஏழு அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உணவு உண்டபின் மீண்டும் பசி எடுப்பது

உணவு உண்டபின் பத்து நிமிடத்திலேயே மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா அதுவும் ஜங்க் உணவுகள், இனிப்புகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் எழுதுகிறதா முக்கியமாக இரவு 12 மணிக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் முதலில் செரிமானத்தை குறைந்து அதை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாக்கில் வெள்ளை படலம்

தூங்கி எழும்போது நாக்கில் வெள்ளை படலம் அதிகமாக இருக்கிறது என்றால், உடலில் நச்சுக்கள் கழிவுகள் அதிகம் தேங்க ஆரம்பித்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இவ்வாறு இருப்பவர்கள் உடனே உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவது சிறப்பு.
உணவு உண்ட பின் தூக்கம்

ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பிறகு தூங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? அப்படியானால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு தொடங்க ஆரம்பிக்கிறது என்று தெரிந்து கொள்வோம். அதாவது, சர்க்கரை நோய் வருவதற்கான எச்சரிக்கை தான் இது.
மலச்சிக்கல்

தினமும் காலையில், எழுந்ததும் மலம் கழிக்க வேண்டும். அப்படி சரியாக மலம் கழிக்காமல் இருந்தால், உடலில் வாதம், பித்தம் சமநிலை இல்லை என்று அர்த்தம். இந்த நிலையில், தினம் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு நார்ச்சத்து உள்ள உணவுகளையும் காய்கறிகள் பழங்கள் மற்றும் நீரை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் சோர்வு

9 மணி நேரம் தூங்கி எழுந்த பின்பும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்கள் என்றால், தூங்கி எழுந்த பின்னும் புத்துணர்ச்சி இல்லை என்றாலும், நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
வாய் துர்நாற்றம்

பல் துலக்கியும், வாயில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது என்றால், குடல் சமநிலையில் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.
முகப்பரு

முகத்தில் பருக்கள் அடிக்கடி வருகிறது என்றாலும், சருமத்தில் அதிக எண்ணெய் பசையுடனும் அல்லது வறண்டு போய் இருந்தாலும், உடலில் உள்ள ரத்தம் அசுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். இந்த நிலையில், ரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை தினசரி உணவில் அதிகம் சேர்ப்பது சிறந்தது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

