கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கனிமொழி எம்.பி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
கோவை – சூலூர் அருகே 10 வயது சிறுமி கடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை – சூலூர் அருகே 10 வயது சிறுமி கடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 23, 2026
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக…

