கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் கடந்த மாதம் பிறந்து சில மாதங்களே ஆன யானை குட்டி ஒன்று தாயைப் பிரிந்து தன்னந்தனியாக சுற்றி திரிந்தது. இதை அடுத்து வனத்துறையினர் யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், தாய் யானையை கண்டுபிடிக்க முடியாததாலும் வேறு யானைக் கூட்டங்களும் இந்த குட்டி யானையை சேர்க்க மறுத்ததாலும் யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இதை அடுத்து, அந்த யானை குட்டியை சிறுமுகை வனச் ரகத்திற்கு உட்பட்ட பெத்திக் குட்டையில் அமைந்துள்ள வனவிலங்கு மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யானை குட்டியின் நிலை குறித்து வனத்துறையிடமிருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
முன்பகை காரணமாகத் தவறான தகவலா?.. டாக்குமெண்ட்களைச் சரிபார்க்காமல் வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்..!
இந்நிலையில், பராமரிப்பு மையத்தில் யானை குட்டி சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறப்பு பராமரிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு வனக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி இளநீர், பால், பழம் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் யானை குட்டி சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

