பொதுவாக கிராமங்களில் வயல்வெளிகளிலும் சாலையோரங்களிலும் சாதாரணமாக களைச்செடி போல வளர்ந்து கிடக்கும் ஒரு அற்புத மூலிகைதான் துத்தி. மஞ்சள் நிற பூக்களையும் பம்பரம் போன்ற வடிவம் உள்ள காய்களையும் கொண்ட இந்த துத்திக் கீரை மனித உடலுக்கு செய்யும் நன்மைகள் எண்ணற்றவை.
குறிப்பாக, இன்றைய நவீன வாழ்வியல் மற்றும் உணவு முறையால் பலரும் அவதிப்படும் மூல நோய்க்கு இது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. அதிக அளவில் நார்ச்சத்தும் குளிர்ச்சி தன்மையும் உள்ளவை. இது குதப் பகுதியில் உள்ள வீக்கம் ரத்தக்கசிவு மற்றும் எரிச்சலை உடனடியாக குறைக்கிறது.

உள்மூலம், வெளிமூலம் என அனைத்து வகையான மூல நோய்களுக்கும் இது மிகச்சிறந்த இயற்கை நிவாரணையாக கருதப்படுகிறது. துத்திக் கீரை குடலின் இயக்கத்தை சீராக்கி மலம் எளிதாக வெளியேற உதவுகிறது.
லேசான பேதி மருந்தாக செயல்பட்டு குடலை சுத்தம் செய்கிறது. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு அதிகரித்து சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
விலையோ குறைவு; சத்தோ அதிகம்.. மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?..
துத்தி இலைகளை நசுக்கி சாறு எடுத்து குடித்து வர உடல் சூடு தணிந்து குழுமை பெறும். உடலில் ஏற்படும் புண்கள் ஆற்றும் அலர்சி எதிர்ப்பு சக்தி துத்திக் கீரைக்கு உள்ளது. வாயு தொல்லை அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கும் துத்தி இலை நல்ல தீர்வாக அமைகிறது.
பருப்பு கடையல் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் துத்திக் கீரையை பாசிப்பருப்பு சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து நெய் கலந்துடன் சாப்பிட்டு வரலாம்.
துத்தி இலை பால் கசாயம் நான்கு அல்லது ஐந்து இலைகளை நன்றாக கழுவி பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மூல நோய் விரைவில் குணமடையும்.

வெளிப்பூச்சுக்கு மூலநோய் வீக்கம் மற்றும் வலி அதிகமாக இருக்கும் போது துத்தி இலைகளை விளக்கெண்ணெய் தடவி லேசாக வதக்கி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்து வர வீக்கம் சற்று என்று குறையும்.
குறிப்பாக, ஆங்கில மருந்துகளாலும் அறுவை சிகிச்சைகளாலும் குணப்படுத்த முடியாத மூலநோயை கூட தொடர்ந்து துத்திக் கீரையை சரியான முறையில் உணவில் சேர்த்து வருவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிறது சித்த மருத்துவம். இனி சாலையோரங்களில் துத்தி செடியை பார்த்தால், அலட்சியப்படுத்தாமல் அதன் பயனை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

