தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இனி முழு பாதுகாப்பில் தளபதி.. தமிழக முதல்வர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு..!
இந்நிலையில், பண்ருட்டி எம்எல்ஏ மோகனை சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் பதவி ஏற்க வருமாறு அழைத்தார். இருக்கையில் இருந்து எழுந்து வந்த அவர், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட பின்னர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அம்மா எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க என்று பதவி ஏற்கும் போது மறைந்த முதல்வர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை பார்த்து கண்கலங்கி அழுதார். பண்ருட்டி மோகனின் செயல் அந்த நேரத்தில் சட்டசபையில் நிசப்தம் ஆக்கியது. முதலமைச்சர் விஜய் இந்த நிகழ்வை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

