தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி கண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவி விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
அதற்காக, அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் 234 தொகுதிகளிலும், ஒரு தொகுதி காலியாகிவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சான்றிதழை மறந்துவிட்டேன்.. கோட்டைக்கு வந்த TVK அமைச்சர்: மறதியால் ஏற்பட்ட சலசலப்பு..!
இந்த நிலையில், அதிமுகவின் தலைமை பதவிக்கு நிலவும் மோதலால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் ஐந்து பேருடன் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வந்தார். எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவினராக சட்டசபைக்கு வந்தனர்.

