தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி கண்டார்.
தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
17-வது சட்டசபையின் முதல் கூட்டம்.. களைகட்டும் எம்.எல்.ஏ.க்களின் பதவியேற்பு விழா..!
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசின் அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவி ஏற்க வில்லை. இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவி ஏற்க முடியாமல் போனது. சான்றுகளை கொடுத்த பிறகு பதவியேற்று கொள்வார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

