விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய வருஷநாட்டை சேர்ந்த இருவரை கைது செய்த வனத்துறையினர், 8 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் அழகர்கோயில் பீட் செண்பகத்தோப்பு – வ.புதுப்பட்டி மலையேற்ற பாதையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த இருவரை பிடித்து சோதனை செய்த போது, சந்தன கட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையடிவாரப் பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது.
வெள்ளக்காடான மதுரை மாநகரம்.. மழைநீரால் ஸ்தம்பித்த போக்குவரத்து – பயணிகள் அவதி..!
மரம் வெட்டப்பட்ட இடத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநர் ரவிமீனா, வனச்சரகர் கார்த்திக் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வாலிப்பாறை பகுதியை சேர்ந்த குபேந்திரன்(55), காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த சோலைராஜா(51) ஆகிய இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து 8 கிலோ எடையிலான 26 சந்தன கட்டைகள், கோடாரி, ரம்பம், கத்தி, டார்ச் லைட், பைக் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பால்பாண்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

