நேற்று இரவு பெய்த கனமழையால் மதுரை மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.குறிப்பாக பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாண்டி பஜார் மற்றும் ரயில்வே நிலையம் முன்பகுதியில் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து செல்லும் நிலை ஏற்பட்டது. பாண்டி பஜார் பகுதியில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால், அங்குள்ள பல கடைகளுக்குள் மழைநீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் மதுரை ரயில்வே நிலையம் முன்பாக முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால், பயணிகள் வருகை மற்றும் நடமாட்டத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால்?.. ஆளுநருக்கு கமல் வைத்த கோரிக்கை!
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல பெரும் சிரமத்தை சந்தித்தனர்.மாநகரின் முக்கிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

