பொதுவாக இந்த ஐந்து பொருட்களில் நாம் செய்யும் தவறுகளால் மகாலட்சுமி வெளியேற தரித்திரம் தான் வீட்டிற்கு வந்து சேரும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக காண்போம். வாஸ்து என்பது வெறும் கட்டிடக்கலை மட்டுமல்ல அது நம் வாழ்விடத்தில் ஆற்றல்களை முறைப்படுத்தும் ஒரு வாழ்வியல் முறை என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
பொதுவாக நமது இல்லங்களில் மகிழ்ச்சியும் செல்வமும் தடையின்றி பெருக வேண்டும் என்பதற்காக அனைவரும் வாஸ்து பார்த்து சில செயல்களை செய்வார்கள். ஆனால், அறியாமையினால் இரவில் நாம் செய்யும் சில செயல்கள் நமக்கு எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வறுமையை உண்டாக்குகிறது. இரவில் கீழ்க்கண்ட பொருட்களை திறந்து வைப்பது அல்லது கவனக்குறைவாக கையாளுவதையோ தவிர்க்க வேண்டும்.
துடைப்பம்

துடைப்பத்தை வெறும் குப்பையை அகற்றும் கருவியாக மட்டும் பார்க்காமல் அது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்பட வேண்டும். துடைப்பத்தை கண்ட இடங்களில் போடுவது அல்லது மற்றவர் கண்களில் படும்படி வைப்பது தவறான செயலாகும். இரவில் துடைப்பத்தை அதன் உரிய இடத்தில் மறைவாக வைக்க வேண்டும். துடைப்பத்தை சரியாக வைக்காத வீட்டில் பணத்தட்டுப்பாடு வீண் விரயங்களும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
எச்சில் பாத்திரங்கள்

நாள் முழுதும் உழைத்த சோர்வு இருப்பார்கள் இரவு உண்ட பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு உறங்கச் செல்வார்கள். இது வீட்டின் எதிர்மறை ஆற்றலை முற்றிலும் அழித்துவிடும். அசுத்தமான பாத்திரங்கள் தரித்திரத்தை அதாவது வறுமையை உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது. உடல் நல பாதிப்புகளை தவிர்க்கும் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். உறங்கும் முன்பே பாத்திரங்களை சுத்தம் செய்வது சிறந்தது.
தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.. ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் தரும் மஞ்சள் மாலை..!
உணவுப்பொருட்கள்

பால், தானியங்கள் மற்றும் சமைத்த உணவுகளை இரவில் திறந்து வைக்க கூடாது. காற்றில் இருக்கும் நுண்கிருமிகள் உணவை சிதைப்பது ஒரு புறம் இருக்க ஆன்மீக ரீதியாக திறந்து வைக்கப்பட்ட எதிர்மறை சக்திகளால் இருக்கக்கூடும். இதனால், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே, அனைத்து உணவுப் பொருட்களையும் முறையாக மூடி வைப்பது சிறந்தது.
தண்ணீர் பாத்திரங்கள்

தண்ணீர் என்பது பஞ்சபூதங்களில் முக்கியமானது மற்றும் நேர்மறை ஆற்றலின் ஆதாரமாக கருதப்படுகிறது. இரவில் தண்ணீர் வாளிகளையோ அல்லது பாத்திரங்களையோ திறந்து வைப்பது தவிர்க்க வேண்டும். குறிப்பாக, படுக்கையறைகளில் திறந்த நிலையில் தண்ணீர் வைப்பது மன அமைதியை குறைக்கும். நீர்நிலைகள் எப்போதும் பாதுகாப்பாக மூடி இருப்பதே சிறந்தது.
சாவிகள்

செல்வத்தின் ஆதாரமாக பணத்தையும் அதை ஈர்க்க வைக்கும் லாக்கர் சாவிகளையும் அலட்சியமாக வைப்பது வாஸ்துபடி பெரும் தவறாக கருதப்படுகிறது. சாவிகளை மேஜை மீது அல்லது மற்றவர் பார்வையிடப்படும் படி வைக்காமல் பாதுகாப்பான பெட்டியிலோ அல்லது பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். சாவிகளை சரியாக பராமரிக்காதது தேவையற்ற பண இழப்புகளுக்கு வழிவகுப்பு கூடும். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் காலம் காலமாக பின்பற்றப்படும் வாஸ்து சாஸ்திர விதிகள் ஜோதிட கருத்துக்கள் மற்றும் நம்பிக்கையில் அடிப்படையில் தொகுக்கப்பட்டது ஆகும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

