சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பலர் உடலை குளிர்ச்சியாக வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். முக்கியமான நீர் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். வெயிலில் இருந்து தப்பிக்க தர்பூசணி ஒரு மாபெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பதால் உடலின் தாகத்தை உடனடியாக தீர்த்து உடலுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால், இந்த தர்பூசணியை சாப்பிடும் போது நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் நமது செரிமான மண்டலத்தை பெரிய அளவில் பாதிக்கும்.

சில குறிப்பிட்ட உணவுகளுடன் தர்பூசணியை சேர்த்து சாப்பிட்டால், கடுமையான வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அப்படி தர்பூசணியுடன் நாம் எக்காரணத்தை கொண்டும் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
பால் மற்றும் பால் பொருட்கள்

பால் அல்லது பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தர்பூசணி சாப்பிட்ட உடனே பருகவோ உண்ணவோ கூடாது. முற்றிலும் இதனை தவிர்க்க வேண்டும். ஆயுர்வேத முறைப்படி தர்பூசணியில் வைட்டமின் சி மற்றும் லேசான சிட்ரிக் தன்மை இருப்பதால், இது பாலுடன் சேரும்போது வயிறு உப்புசம் மற்றும் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கி விடுகிறதாம். மேலும் பாலில் உள்ள புரதமும் தர்பூசணியின் தன்மையும் முற்றிலும் முரண்பட்டவை ஆக இருப்பதால், இது வயிற்றில் தேவையற்ற வாய்வு தொல்லையில் ஏற்படுத்திவிடுகிறது.
வறுத்த உணவுகள் மற்றும் முட்டை

முட்டையில் மற்றும் வறுத்த உணவுகளில் கொழுப்பு மற்றும் புரதம் அதிகம். தர்பூசணி குளிர்ச்சியான மற்றும் ரசாள் நிறைந்த பழம் என்பதால், சூடான வறுத்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடும்போது செரிமான மண்டலத்தில் குழப்பம் ஏற்பட்டு மழுமழுப்பு (Nausea) மற்றும் ஜீரணக் குறைபாடு ஏற்படலாம்.
தண்ணீர்

நிறைய பேர் எந்த பழங்களை சாப்பிட்டாலும் உடனே நீர் அருந்துவதை ஒரு பழக்கமாகவே வைத்திருப்பார்கள். குறிப்பாக, தர்பூசணி சாப்பிட்ட பிறகு இந்த தவறை நீங்கள் கட்டாயம் செய்யக்கூடாது. ஏற்கனவே, தர்பூசணியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருக்கிறது. அதை சாப்பிட்ட உடனே மீண்டும் தண்ணீர் குடித்தால், அது நமது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களை நீர்த்துப்போக செய்து விடுகிறது. இதனால், உங்கள் உடலின் செரிமானம் தாமதமாகி வயிற்று வலி மற்றும் அசோகரின் ஏற்படுகிறது. குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது கழித்து தண்ணீர் குடிப்பது சிறந்தது.
மாமிசம் மற்றும் அதிகம் புரதம் கொண்ட உணவுகள்

குறிப்பாக பிரியாணி அல்லது இறைச்சி சாப்பிட்ட உடனே தர்பூசணி சாப்பிடும் வழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது செரிமான மண்டலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அசைவ உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆனால், தர்பூசணி மிக வேகமாக செரிமானம் ஆகிவிடும். இந்த இரண்டு உணவுகளும் ஒரே நேரத்தில் வயிற்றில் சேரும்போது செரிமான சுழற்சி குழம்பி போய் உணவு வயிற்றில் தேங்கி புளித்துப் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
செரிமானப் பிரச்சனை முதல் மூக்கடைப்பு வரை.. ‘இந்த’ ஒரு பழம் போதும்..!
தர்பூசணி சாப்பிடச் சிறந்த நேரம் எது?

மதிய வேளை
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தர்பூசணி சாப்பிடச் சிறந்த நேரம்.
தனியாகச் சாப்பிடவும்
தர்பூசணியை மற்ற உணவுகளுடன் கலக்காமல் தனித்த பழமாகச் சாப்பிடுவதே மிகச் சிறந்தது.
இரவு நேரம் தவிர்த்தல்
இரவு நேரத்தில் தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இதில் உள்ள அதிக நீர்ச்சத்து தூக்கத்தைக் கலைக்கலாம் மற்றும் செரிமானத்தைச் சுணக்கலாம்.
குறிப்பு
சளி, இருமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்கள் தர்பூசணியின் குளிர்ச்சித் தன்மையால் அதன் உட்கொள்ளலைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தர்பூசணி எப்போதுமே தனியாக சாப்பிட வேண்டிய ஒரு பழம். இதை மற்ற எந்த உணவுகளோடும் அல்லது பானத்தோடும் கலந்து சாப்பிடக்கூடாது. காலையில், வெறும் வயிற்றில் இரண்டு உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் தர்பூசணி சாப்பிடுவது மிக சரியான முறையாகும். இந்த இதனை மனதில் வைத்துக்கொண்டு தர்பூசணியை சாப்பிட்டால் எந்த ஒரு உபாதையும் இல்லாமல் இந்த கோடை காலத்தை மிகவும் ஆரோக்கியமாக நீங்கள் எதிர் கொள்ளலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

