நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக நடிகர் விஜய் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அதிமுக குறித்தும் விஜய் குறித்தும் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் எடுத்த உடனே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார்.

புரட்சித்தலைவரால் கூட எடுத்தவுடன் முதலமைச்சராக முடியவில்லை. இருந்தாலும், மக்கள் அவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. விஜயின் சின்னம் விசில் என்பது பொதுவாகவே சினிமாவில் நல்ல சீன் வந்தால் மக்கள் விசில் அடித்து பழகிவிட்டார்கள். விசில் அடித்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

திராவிட மாடல் என்றாலே சாதனை தான்.. உலக நாடுகளுடன் மோதும் TN – ஸ்டாலினின் அதிரடி பதிவு..!
விசில் என்றாலே, அது சவால் விடுவது தான். அதிமுக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாது. அடுத்த, 500 வருடங்களுக்கு ஒரே கட்சி இருக்கப் போகிறதா என்றால் இல்லை தானே. அடுத்தடுத்த தலைமுறையும் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள். அப்படித்தான் விஜய் வந்திருக்கிறார்.

இந்த தேர்தலில், விஜய் எவ்வளவு வாக்குகளை பெறப்போகிறார் என்பதை பார்த்து தான் நமக்கு தெரியும். விஜயின் அரசியல் நடவடிக்கைகள் தேர்தல் முடிவுக்கு பின்தான் பார்க்க முடியும். அவருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

தேர்தலுக்கு முன்பே அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தனக்கு இத்தனை சீட்டு வேண்டும் என்று கேட்டு இருந்தால், எடப்பாடி நிச்சயமாக கொடுத்திருப்பார். அவருக்கு பின் விஜய் இளம் தலைமுறையை தாங்கி இதற்கான வாய்ப்பு காலம் கொடுத்திருக்கும் என்று சிங்கமுத்து தெரிவித்திருந்த கருத்து கவனத்தையும் ஈர்த்துள்ளது.

