வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் த்ரிஷா பெற்று இருக்கிறார்.
ஓ இதுதான் விஷயமாம்.. கோவிலுக்குச் சென்ற விஜய்யின் பின்னணி என்ன?..

த்ரிஷா நடிப்பில் வெளியான படம் தக் லைஃப் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களால் தோல்வியை அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு த்ரிஷா நடிப்பில் அடுத்து வெளியாகியுள்ள திரைப்படம் கருப்பு. சூர்யா நடித்துள்ள இந்த திரைப்படத்தை RJ பாலாஜி இயக்கி உள்ளார். படம் மே மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனிடையே, விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் இன்னும் சர்ச்சைகளாகவே இருக்கிறது. இது குறித்து விஜய்யும், த்ரிஷாவும் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்து வருவது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், த்ரிஷாவுக்கு மே 4ம் தேதி பிறந்தநாள் ஆகும். ஆனால், அவர் தற்போது முன்கூட்டியே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பிரீ பர்த்டே என்கிற பெயரில் தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.

மேலும், த்ரிஷா எந்தவித பெயரிட்டும் அழைக்க முடியாத சில நட்புகளும் உண்டு என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். த்ரிஷா ஏன் முன்கூட்டியே தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் என்பதற்கான அதிகார பூர்வ தகவல் எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

