‘ஆட்டி’ பட விழாவிற்கு தமிழக அரசின் சிறப்புப் படை சீருடையை அணிந்து வந்து, செய்தியாளர்களிடம் நடிகர் கூல் சுரேஷ் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்த சம்பவம் இப்போ சோசியல் மீடியால செம்ம வைரலாகி வருகிறது.
முன்னதாக, சினிமா ப்ரோமோஷன்களில் வித்தியாசமான உடைகளை அணியும் கூல் சுரேஷ், இம்முறை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடி படை’யின் சீருடை போன்ற ஆடையை அணிந்து வந்திருந்தார்.
இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!
“பெண்கள் பாதுகாப்புக்கான ஒரு மதிப்பிற்குரிய சீருடையை இப்படி சினிமா விளம்பரத்திற்காக பயன்படுத்தி இழிவுபடுத்தலாமா?” என செய்தியாளர்கள் நேரடியாகக் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வியால் ஆத்திரமடைந்த கூல் சுரேஷ், “நான் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தித்தான் இந்த உடையை போட்டிருக்கேன்.
உங்கள மாதிரி ஆளுகதான் நல்ல விஷயம் செஞ்சாலும் மாத்திப் பேசி நாட்டை குட்டிச்சுவராக்கி வச்சிருக்கீங்க” என ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்தார். கூல் சுரேஷ் தனக்குத்தானே நியாயம் கற்பித்தாலும், பெண்கள் பாதுகாப்புக்கான ஒரு சீருடையை சுய விளம்பரத்திற்காக இப்படி கேலிப்பொருளாக்கக் கூடாது என நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

