நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் 340 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து ஆல்-டைம் பிளாக்பஸ்டர் சாதனையை படைத்துள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் 340 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ போஸ்டருடன் உறுதிப்படுத்தியுள்ளது.
தட்டிக்கொடுத்த பாரதிராஜா.. சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்கும் எக்ஸ் பதிவு..!
மே 15-ல் வெளியான இப்படம், தற்போது வெற்றிகரமாக 5-வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளதோடு, விரைவில் இதன் 25-வது நாள் வெற்றி விழாவையும் கொண்டாட படக்குழு தயாராகி வருகிறது. ஜூன் 12-ஆன இன்று அமேசான் பிரைமில் படம் வெளியாகியிருந்தாலும், இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர்களிலும் வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கங்குவா போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவே, சூர்யாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை இந்த ‘கருப்பு’ திரைப்படம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.

