தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விஜய் திருச்செந்தூருக்கு வந்திருக்கும் தகவல் பரவியதை அடுத்து, விஜயை நேரில் காண ஏராளமான மக்கள் குவிந்ததால் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ‘தளபதி தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். போடப்பட்டிருந்தது. முன்னதாக, விஜய் கோவிலுக்கு வருகை தந்தது. சாதாரண தரிசனம் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.

அண்மையில், மக்கள் சந்திப்புகள் அரசியல் ஆலோசனைகள் கட்சி அமைப்பு வேலைகள் என தீவிரமாக விஜய் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிலையில், தற்போது ஆன்மீக பயணத்திலும் அவர் கவனம் செலுத்தியது பேசும் பொருளாகியுள்ளது.
Thalapathy at Tiruchendur 🦚🙏 pic.twitter.com/1shjKa7WLv
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 28, 2026
ஏற்கனவே, அரசியலில் களம் இறங்கி தேர்தலை சந்தித்திருக்கும் விஜய் பொதுமக்களுடன் நேரடியாக கலந்து கொள்வது கோவில் தரிசனங்கள் சமூக செய்திகளை முன்வைப்பது என விஜய் வேறு ஒரு பாணியில் நகர்கிறார் என்று கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
திராவிட மாடல் என்றாலே சாதனை தான்.. உலக நாடுகளுடன் மோதும் TN – ஸ்டாலினின் அதிரடி பதிவு..!

இது ஒரு புறம் இருக்க ஆன்மீக விஜயம், அரசியல் இவற்றின் நடுவே திருச்செந்தூரில் விஜய்க்கு கிடைத்த மக்கள் வரவேற்பு ஆச்சிரியப்படுத்தி உள்ளது. அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

இந்நிலையில், விஜய் திடீரென கோவிலுக்கு சென்றதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இதற்கு காரணம் அவரது ஜோசியர் என்று கூறப்படுகிறது. விஜய் தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் அவருக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றால், திருச்செந்தூர் சென்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்யும்படி ஜோதிடர் கூறினாராம் அதனால் தான், விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அங்கு கடலிலும் கால் வைத்து அவர் குறிப்பிடத்தக்கது.

