தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூபாய் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி மணிரத்தினம் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

லீக்கானாலும் குறையாத எதிர்பார்ப்பு: விஜய்யின் ‘ஜன நாயகன்’ புதிய ரிலீஸ் தேதி இதுதான்..!
இவர் தென் இந்திய சினிமாவில் முன்னாடி நடிகையாகவும், வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. மேலும் இவர் ராமாயணா பார்ட் 1,2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், நீங்கள் மலையாளி என்றாலும் தெலுங்கு எப்படி இவ்வளவு சரளமாக பேசுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சாய் பல்லவி இல்லை நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் என பதில் கூறினாராம்.

இதன் பின் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாளி என்று கூறியதற்கு சாய்பல்லவி கோபுமடைந்தார் என போலியானதாக தகவல்கள் பரவியதாம். இதனால், தேவையற்ற விவாதங்கள் உருவானதால், இவர் மலையாளத்தில் நடித்துவிட்டு எப்படி மலையாளத்தை அசிங்கப்படுத்தலாம் என சர்ச்சையானது.

இதுகுறித்து சமீபத்தில், பேசும்போது சாய்பல்லவி மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார். அதாவது, நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக காட்டியதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அது எனக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. நான் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் என்பதை மட்டுமே கூறினேன். எந்த மொழியையோ மக்களையோ குறைத்து பேசும் எண்ணம் எனக்கு இல்லை என சாய்பல்லவி உருக்கமாக பேசி இருந்தார்.

