கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும் தனது நிலையை பயன்படுத்தி தனது மனைவி மற்றும் தான் சம்பாதித்த 175 சவரன் நகை ஆகியவற்றை அபகரித்ததாக கோவை சிஎஸ்ஐ திரு மண்டல பேராயர் பிரின்ஸ் கால்வின் மீது திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி அளித்த புகாரின் பேரில் கோவை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
நாகர்கோவிலை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரூல்ஸ்வெல்ட். கடந்த 2003 ஆம் ஆண்டு இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஏற்கனவே சில வாகரத்து பெற்றிருந்த ஹைடா செல்வகுமாரி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
72 மணி நேரப் போராட்டம் தோல்வி.. குட்டி யானையை ஆக்ரோஷமாக விரட்டிய ஆண் யானை..!
ஐடா செல்வகுமாரிக்கு தனது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை இருந்த சூழலில் அந்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ரூஸ்வெல்ட் கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததன் பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ரூஸ்வெல்டின் மனைவியான ஐடா செல்வகுமாரிக்கும் கோவை சிஎஸ்ஐ திருமண்டல பேராயராக உள்ள பிரின்ஸ் கால்வினுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
கிறிஸ்தவ தேவாலய விதிகளுக்கு மாறாக அவர்களது திருமணம் நடைபெற்றதாக ஏற்கனவே புகார் எழுப்பப்பட்டு அது குறித்த வழக்கு நடைபெற்று வரும் சூழலில் சிறையில் இருக்கும் தனது நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பேராயர் பிரின்ஸ் கால்வின் தனது மனைவியை அபகரித்ததுடன் தான் சம்பாதித்து வைத்திருந்த 175 சவரன் நகையையும் அபகரித்துக் கொண்டதாக ரூஸ்வெல்ட் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் ரூல்ஸ்வெல்ட் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நீதிபதி குற்றச்சாட்டு குறித்து பிரமாண பத்திரம் மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
கிறிஸ்தவ திருமண்டல பேராயர் மீது ஆயுள் தண்டனை கைதி தனது மனைவி மற்றும் தான் சம்பாதித்த நகைகளை அபகரித்ததாக வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

