தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும், ஒரு புதிய ரிட் மனு தக்கல் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திரிஷாவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.. ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!
இந்த மனுவை சென்னை கொடுங்கையூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். பெரம்பலூர் தொகுதி வாக்காளராக போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது.

நேர்மையான வெளிப்படையான அரசியலை பேசும் விஜய் தனது வேட்பு மனுவில் குடும்பத்தினருக்கு பெருமளவு கடன் வழங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்த பரிவர்த்தனைகளின் உண்மை தன்மை குறித்து தற்போது, சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மனுவில் இந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையமும் வருமானவரித்துறையும் தனிவிசாரணை நடத்த வேண்டும் என்றும், மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த வழக்கின் அடுத்த கட்ட முன்னேற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

