சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் கேரியரில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என அவரது ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.
என் வாழ்க்கையே மாறிடுச்சு.. ஸ்ருதி ஹாசன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வாராஹி அம்மன்..!

இந்த நிலையில், நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாக்கலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பேசிய ஆர் ஜே பாலாஜி திரிஷா குறித்து பேசுகையில், திரிஷா எங்கள் குழுவுடன் இணைய முடியவில்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் 23 ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்தில் இருப்பது எளிதல்ல சமீப காலத்தில் அவர் செய்த கதாபாத்திரங்களில் கருப்பு படத்தில் அவர் நடித்திருக்கும் வேடம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று அந்த பேட்டியில் த்ரிஷாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

