ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோயம்புத்தூரில் உள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாட்டில், ஓசூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)
இதனை அடுத்து கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கோவையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், தொழில்துறையினர், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவையைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஊரக வளர்ச்சித்துறை மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

