தமிழக பட்ஜெட் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போல் கட்சிகளின் வளர்ச்சிக்காக இல்லாமல் கோவை மக்களின் வளர்ச்சிக்காக இருக்கும் தமிழக மதுவிலக்க ஆயத்தர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டியளித்துள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கிடவு பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை அமைச்சர் சென்னியூர் பகுதியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ஆகஸ்ட் 5 நடைபெறும் தமிழக பட்ஜெட் குறித்த கேள்விக்கு ஐந்தாண்டுகளில் சில கட்சிகளின் வளர்ச்சிக்காகவும் சில கட்சி நிர்வாகிகளின் வளர்ச்சிக்காகவும் பட்ஜெட் இருந்திருப்பதாகவும் இந்த பட்ஜெட் கோவை பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட் இருக்கும் என்றும் கோவைக்கு எதிர்பார்க்காத திட்டங்களை கொடுத்துள்ளதாகவும் அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் மதுவிலக்கு மட்டும் ஆய தீர்வு துறை மோசமான நிலையில் இருப்பதாக டாஸ்மாக் குறித்து பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் தனியார் மையம் ரெஸ்ட்ரோபார் என ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கனிமவளக் கொள்ளை குறித்து பேசியவர் தொடர்ந்து எங்கெல்லாம் கனிம வளங்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அண்டை மாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

