தமிழகத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு, முறையாக வரன்முறை செய்யப்படாத பகுதிகளில் இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த, தற்போது அடுத்த ஆண்டு (2027) ஜூலை 5-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் விண்ணப்பிக்க ஜூலை 5, 2026 வரை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது, அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ளவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
குதிரை பேரம் தேவையில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!
ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

