சென்னையின் அண்ணாநகர் பகுதியில், மாநகராட்சி நிதியின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ‘போகன்வில்லா பூங்காவை’ அமைச்சர் செங்கோட்டையன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எங்களுக்கு குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆட்சி நடத்துவதற்குத் தேவையான வலுவான கூட்டணி எங்களிடம் உறுதியாக உள்ளது” என்று அவர் பதிலளித்தார். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயன்றவர்களுக்குச் சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு பில்டிங்கை வெச்சே கோட்டையை பிடிச்சுட்டோம்.. வைரலாகும் TVK அலுவலகம்..!
இந்த பூங்காவில் 1,350-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளன. நவீன திறந்தவெளி உடற்பயிற்சி மையம், தியானக் கூடம் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு உபகரணங்கள் போன்ற வசதிகள் இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் பூங்காவைத் திறந்து வைத்த பிறகு, அங்கிருந்த கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

