சட்டமன்றத்தில் சுமார் 43 நிமிடங்கள் தனது பதிலுரையை ஆற்றிவிட்டு வெளியே வந்த முதலமைச்சர் விஜய்யை, அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றி முடித்த பின் முதலமைச்சர் விஜய் அவையை விட்டு வெளியே வந்தபோது, லாபியில் நின்று கொண்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ. எஸ்பி வேலுமணி வேகமாக அவரை நோக்கி வந்தார். முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து குலுக்கிய அவர், “மிக நன்றாகப் பேசினீர்கள், வாழ்த்துகள்!” என்று பாராட்டு தெரிவித்தார்.
சட்டத்தைக் கையில் எடுத்த நடிகர் ரவி மோகன்.. காவல்துறை கொடுத்த டோஸ்..!
இதற்கு முதலமைச்சர் விஜய்யும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது வேலுமணியுடன் மற்றொரு அதிமுக எம்.எல்.ஏ-வான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் உடனிருந்தார். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர், முதலமைச்சரின் உரையைப் பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

