சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரொக்கப் பணம் திருடப்பட்டதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடிகர் ரவி மோகன் வீட்டில் வேலைக்குச் சென்ற இரண்டு பணிப்பெண்களும், ஒரு சிறுவனும் வீடு திரும்பவில்லை என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நீலாங்கரை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பொருட்கள் திருடுபோன சந்தேகத்தின் பேரில் அவர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. “சந்தேகம் இருந்தால் போலீசில் தான் புகார் அளிக்க வேண்டுமே தவிர, யாரையும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் அடைத்து வைத்து விசாரிக்கக் கூடாது” என்று போலீசார் நடிகர் தரப்பிற்கு அறிவுறுத்தினர்.
சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!
பின்னர், அந்தப் பணிப்பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டுக் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரவி மோகனின் மேலாளர் நீலாங்கரை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். அதில், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் பணம் திருடு போயுள்ளதாகவும், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

