தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் மௌனம் குறித்துக் கேள்வி எழுப்பிய விமர்சகர்களுக்கு மிகக் காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.
“விஜய் பொதுவெளியில் அதிகமாகப் பேசுவதில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கடந்த 60 வருடமாக தமிழ்நாட்டில் பேசிப் பேசியே நாட்டை கெடுத்து வைத்திருக்கிறார்கள். இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று பேசிவிட்டு ஏமாற்றுவதை விட, விஜய் பேசாமல் தன் செயலில் நிருபித்துக் காட்டுகிறார். எதற்கு அவர் வீணாகப் பேச வேண்டும்?” என்று காட்டமாகக் கேட்டுள்ளார்.
“நாங்கள் கூப்பிடல.. அவரே வந்தார்” – கேப்டன் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து உருகிய ஷோபா..!
மேலும், மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் எல்லோரையும் அரவணைத்து, உண்மையான ‘அதிகாரப் பகிர்வு’ மூலம் மக்களுக்கு நன்மை செய்யவே விஜய் நினைக்கிறார் என்றும், ஒரு மகனைப் பெற்ற தந்தையாக அவன் இந்த நாட்டின் முதல்வராக உயர்ந்து நிற்பதைப் பார்ப்பதை விட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும் என்றும் எஸ்.ஏ.சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

