ஆரம்பகாலத்தில் சினிமாவுக்குள் நுழைந்த முதலமைச்சர் விஜய்யின் வளர்ச்சிக்கு, மறைந்த நடிகர் விஜயகாந்த் எப்படி உறுதுணையாக இருந்தார் என்பது குறித்து விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு ஆரம்பத்தில் பெரிய வெளிச்சம் தந்தது விஜயகாந்த் தான். ‘செந்தூரபாண்டி’ படத்தில் அவரை நடிக்கக் கேட்பதற்காக என் கணவர் எஸ்.ஏ.சி போன் செய்தபோது, ‘சார் நீங்க வர வேண்டாம், நானே வர்றேன்’ எனச் சொல்லி விஜயகாந்தே எங்கள் வீட்டிற்குத் தேடி வந்து அந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..
மேலும், எஸ்.ஏ.சியுடன் 17 படங்கள் வரை இணைந்து பணியாற்றியுள்ள விஜயகாந்திற்கு, விஜய் மீது எப்போதும் ஒரு தனிப் பாசம் இருந்தது என்றும், இன்று விஜய் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதை பார்க்க அவர் இல்லையே என்றும் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

