டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவர் தானே காரை ஓட்டிச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசியல் மற்றும் அரசுப் பணிகளுக்கு மத்தியில், உலக நன்மைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் சன்னதியில் நடந்த சிறப்புப் பூஜைகளில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு கைகூப்பி சாமி தரிசனம் செய்தார்.
பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!
வழக்கமாக முதலமைச்சர்கள் காரின் பின் இருக்கையில் அமர்ந்து செல்வதே வழக்கம். ஆனால், தரிசனத்தை முடித்துக் கிளம்பிய விஜய், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளையும் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக, எவ்வித பந்தாவும் இன்றி தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஸ்டீயரிங்கை பிடித்துக் காரை ஓட்டிச் சென்றார்.
சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ, திரையில் பார்ப்பது போலவே நிஜத்திலும் அவர் புன்னகையுடன் கார் ஓட்டிச் சென்ற விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. “முதலமைச்சர் ஆனாலும் தலைவர் எளிமை மாறவில்லை, எப்பவுமே மாஸ் தான்” என்று அவரது ஆதரவாளர்களும் நெட்டிசன்களும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

