தனியார் பள்ளிகள் தங்களுடைய பள்ளியின் விளம்பர பலகையில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த அடிப்படையில், கல்வி கட்டண விவரங்களை வெளியிடும்படி தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் கடந்த மாதம் ஒன்றாம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, சுற்றறிக்கையும் வெளியிட்டு இருந்தார். இதனை எதிர்த்து சென்னை ஹை கோர்ட்டில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், நிர்ணயித்த தனியார் கல்வி நிறுவனங்கள் மீது அதிகார வரம்பு இல்லாமல் மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தில் மாற்றமா?.. ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை..!
அதன் அடிப்படையில், இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எம் தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிபிஎஸ்சி போன்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த முடியாது என்றும் வாதத்தை முன் வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விளக்க அழிக்கும் பிரிவில் கூட பொதுநலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கல்வி கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. கல்விக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது கருப்பு பணம் அல்ல அது குறித்து விவரங்களை வெளியிடலாமே என்று மனுதாரர் தரப்பிற்கு நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். வருகிற 18-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையும் தள்ளி வைத்துள்ளார்.

