தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர், நடிகையாக தனக்கென இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது, அரசன் மற்றும் சர்தார் 2, மனுஷ், நோ என்ட்ரி, பிசாசு 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக, ஆண்ட்ரியா வித்தியாசமான கதை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு எப்போதும் வெளிப்படையாகவே பதில் அளித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!
அதற்கு பதில் அளித்த அவர், நான் பார்க்க சந்தோசமாக இருக்கிறேன். அதுவே, போதும் ஒரு காலத்தில் எனக்கு திருமணம் ஆகவேண்டும் என்ற பெரிய அழுத்தம் இருந்தது. குறிப்பாக, 30 வயதை கடந்த போது இன்னும் கல்யாணம் ஆகலையே என்ற பயம் ஏற்பட்டது.

சில மாப்பிள்ளைகளை சந்தித்து பேசி இருக்கிறேன். ஆனால், வாழ்க்கையை கடந்த இரண்டு ஆண்டுகளில் வேறு கோணத்தில் புரிந்து கொண்டேன். திருமணம் செய்த எல்லோரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதை நேரத்தில், திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறார்கள். வாழ்க்கையில், சில விஷயங்கள் கட்டாயப்படுத்தி நடக்கக்கூடாது. அதற்கான நேரம் வந்தால், அது தானாகவே நடக்கும் என தனது பார்வைகள் திருமணம் குறித்து ஆண்ட்ரியா பேசியிருக்கிறார்.

