தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிட்டார். இதில் இரண்டிலுமே, வெற்றி பெற்றநிலையில், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்வதாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம் பெற்று இருந்தது.
பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், இதில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் நடைமுறை என்பதால் விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

