தமிழக முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றது முதல் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடி படை, போதை பொருட்களை ஒழிப்பு, மதுக்கடைகள் மூடல் என அடுத்தடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார்.
மேலும், சட்ட ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி உள்ளார். இந்த நிலையில், மாநில அரசின் நிதிநிலை குறித்து நீதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்குச் சிக்கல்?.. எடப்பாடியாரின் ‘மாஸ்டர் பிளான்’..!
அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒதுக்க வேண்டிய நிதி குறித்தும் துறைவாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருகிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்ற போது அறிவித்த நிலையில், இந்த ஆலோசனை தற்போது நடைபெற்று வருவது கவனம் பெற்றுள்ளது.

