தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது தமிழக சட்டசபையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்தவுடன் எஸ் பி வேலுமணி பேசத் தொடங்கினார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுகவின் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவளித்த எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி வி சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை பறித்த நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசு.. மக்களுக்கு எதிரான நடவடிக்கையா? – சிபிஎம் கேள்வி..!
ஆர்பி உதயகுமார், OS மணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்களும் வெளியானது. அதிமுக பிளவுப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் சபாநாயகரை தனித்தனியே சந்திக்கின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை செயலரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி சார்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார். மேலும், கட்சி தகவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

