திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை இன்று முதலமைச்சர் விஜய் சந்தித்தார். விஜயை ஆரத்தழுவி வரவேற்ற மு க ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய், முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினைச் சந்தித்திருப்பது, மிகவும் கண்ணியமான மற்றும் முதிர்ச்சியான ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.
போட்டிக்கு அப்பாற்பட்ட மரியாதையையும், அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட கண்ணியத்தையும் உள்ளடக்கிய இத்தகைய அரசியலையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தலைவர்கள் வெறுப்புக்கு மாற்றாக நாகரிகத்தையும், பிளவுகளுக்கு மாற்றாக உரையாடலையும் தேர்ந்தெடுக்கும்போது, ஒரு மாற்றத்தின் சகாப்தம் தொடங்குகிறது.
ஜனநாயகக் கலாச்சாரம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை, தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவுக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Chief Minister Thiru Vijay visiting former Chief Minister Thiru M.K. Stalin is a very decent and mature political gesture.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 11, 2026
This is the politics people expect respect beyond rivalry, dignity beyond power.
An era of change begins when leaders choose civility over…

