பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் இரண்டு முதல் 26 ஆம் தேதி வரை தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் படி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர்.
இவர்களின் விடைத்தார்கள் மறுமதிப்பீட்டு பணிக்காக ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளை பள்ளி கல்வித்துறையின் தேர்வு துறை மேற்கொண்டது.

ஆட்சி அமைப்பதில் சிக்கல்?.. சட்ட நிபுணர்களுடன் விஜய் நடத்திய திடீர் சந்திப்பு..!
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, நாளை காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

