ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே வழிவிடு முருகன் கோவிலானது அமைந்துள்ளது. இத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், வேல் குத்தி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி விமர்சையாக நடைபெறுகிறது.
செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி அடர்ந்த காடுகள் மற்றும் செடி, கொடிகள் நிறைந்த இடமாக காணப்பட்டது. அப்போது, ஒரு பெரிய அரச மரத்தின் அடியில் சிறிய வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டது. ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்பவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் வழிகாட்டியாகும்.

தடைகளை நீக்கி வழிபடுபவராகவும், இந்த முருகன் விளங்கியதால் இவருக்கு வழிவிடு முருகன் என்ற பெயர் அமைந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில், சிறிய அளவில் இருந்த இந்த ஆலயம். பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற நிறைவேற இன்று பிரம்மாண்டமான கோவிலாக வளர்ந்துள்ளது. இத்தளத்தில், மிக முக்கிய சிறப்பம்சம் கருவறையில் முருகப்பெருமானும் அவருக்கு வலது புற விநாயகப் பெருமானும் ஒரே பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

இத்தகைய அமைப்பை காண்பது மிகவும் அரிது. இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலை போலவே இங்கும் சாயா மரம் தல விருச்சமாக உள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் இம்மரத்தை சுற்றி வந்து வழிபடுகின்றனர். வழக்கு விவகாரங்கள், சொத்து தகராறுகள் மற்றும் திருமண தடைகள் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் முருகன் அவர்களுக்கு நல்வழி காட்டுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவிலின் முக்கியமான திருவிழா பங்குனி உத்திரம் இது 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் பூக்குழி இறங்குதல், காவடி எடுத்தல் நேர்த்திக்கடன் செலுத்துதல் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர வைகாசி விசாகம் கந்தசஷ்டி மற்றும் தைப்பூசம் ஆகிய விழாக்களும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றன. ராமநாதபுரம் வருபவர்கள் தங்களின் பயணங்கள் தடையின்றி அமையவும் காரியங்கள் வெற்றியாகவும் இந்த வழிவிடு முருகணை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

