நடிகர் விஜய்யிடம் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இதனை அடுத்து, சில நாட்களில் விஜயும் திரிஷாவும், ஒரே நிறத்தில் உடைபோட்டுக்கொண்டு ஒரு திருமணத்திற்கு வந்தார்கள். அதனை தொடர்ந்து, அவர்களுக்குள் காதல் இருப்பதாக எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். சம்மந்தப்பட்ட அவர்களோ ஏதும் ரிப்ளை செய்யவில்லை.

யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?
இந்த விவகாரம் தொடர்பாக, பிரபல youtube சேனலுக்கு வனிதா விஜயகுமார் பேட்டி அளித்திருந்தார். அதில், விஜயை எனக்கு நன்றாக தெரியும். அவரும் நானும் ஒரு படத்தில் நடித்தோம். அப்போது, உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் வாங்கிய சம்பளத்தை விட அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் குறைவுதான்.

அதனை இப்போதுதான் நான் வெளியே சொல்கிறேன். அதை போல், அந்த சமயத்தில் எனக்கு பிளைட்டில் டிக்கெட் போடுவார்கள். அப்போதுதான் கஷ்டம் என்றால் என்னவென்று விஜய்க்கு தெரியும் என எஸ் ஏ சந்திரசேகர் சொல்லுவார்.

திரிஷாவை பொறுத்தவரை அவர் எல்லோருக்கும் நல்ல பிரண்ட். அவரது சர்க்கிள் வேறு எனது சர்க்கிள் வேறு தான். இருந்தாலும், நல்ல பழக்கம் சினிமாவை தாண்டி நிறைய பழக்கியிருக்கிறோம். நான் போன் செய்யும்போது அவர் தியேட்டரில் இருந்தால், போனை கட் செய்யாமல், நான் இப்போது தியேட்டரில் இருக்கிறேன். முடித்துவிட்டு அழைக்கட்டுமா? இப்போது எதுவும் அவசரமா? என்று கேள்வி கேட்பார். அவர் நல்லவர் எல்லோரும் த்ரிஷா கதையை பேசுகிறார்கள் எல்லோரின் கதையும் எனக்கு தெரியும் என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருந்தார்.

