தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று பாலவாக்கம், அம்பேத்கர் சிலை, திருவான்மியூர், நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில், அண்ணா சாலை, கலைஞர் வளைவு, ஜீனி சாலை சந்திப்பு, ஆகியவற்றின் வழியாக வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, விஜய் பேசுகையில் 10 தடவை தோற்றுவர் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் வெளியேவே வரமாட்டார் என சொல்கிறார். ஆனால், நீங்கள் சேலத்தின் அருகே இருக்கும் தொகுதியில் மட்டும் பதுங்கிக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!
சொந்த தொகுதியில் தோற்று விடுவோம் எனும் அச்சத்தில் தான் நமது சின்னத்தையே திருடிவிட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமியை விஜய் விமர்சித்து இருந்தார்.

மேலும், அப்போது பேசுகையில் சேலத்தில் விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த சுயச்சை வேட்பாளருக்கு டி.வி சின்னத்தில் வாக்களிக்குமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

