ஹச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் அண்மையில் இணையதளத்தில் ரிலீசானது. இது இந்திய திரை துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் அரசியலுக்கு வந்திருப்பதால் அவரை காலி செய்யத்தான் திமுகவும், பாஜகவும் சேர்ந்து இப்படி செய்வதாக தமிழக வெற்றிக்கழகத்தினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!
முன்னதாக, திரையரங்குக்கு வராத ஒரு படம் எப்படி லீக் ஆனது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வெளியான ப்ரிண்டில் எடிட் என்று குறிப்பிட்டு இருந்ததால் இதனை எடிட்டர் தரப்பு தான் ரிலீஸ் செய்திருக்கும் சொல்லப்போனால் விஜய் தரப்பே கூட இதை செய்திருக்கலாம் என்று சகட்டுமேனிக்கு பேச்சுகளும் உருவானது.

இது ஒரு பக்கம் இருக்க பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது குறித்து கூறியிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு விஜய் கையெழுத்து போடும்போது என்ன சொன்னார் என்பதை அவரே ஆடியோ லாஞ்சில் சொல்லி இருப்பார்.

நான் அரசியலுக்கு வந்து விட்டேன் இது என்னுடைய கடைசி படம் கண்டிப்பாக, பிரச்சனைகள் வரும் என்று தெரிந்துதான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என சொல்லி இருக்கிறார்.

அது எங்களுக்கு பெரிய ஷாக்கோ அதிர்ச்சியோ இல்லை. ஒருவரை மனரீதியாக அடிக்கலாம். அடுத்தது, பொருளாதார ரீதியாக அடிக்கலாம். அதற்கு எதிர்க்கட்சியினர் தான் காரணம் என்பதை எல்லோருக்கும் இயல்பாக வரக்கூடிய சந்தேகம்தான். எனக்கும் அந்த சந்தேகம்தான். படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகி இருந்தால்தான் அதிர்ச்சியாக இருப்போம் என்றார்.

